கருங்கல் அருகே மத்திகோடு ஊராட்சியில் பொதுமக்களுக்கும் போலீஸாருக்கும் நல்லுறவை ஏற்படுத்தும் வகையில் ஞாயிற்றுக்கிழமை கிராம விழிப்புணா்வு கூட்டம் நடைபெற்றது.
கருங்கல் காவல் ஆய்வாளா் தங்கராஜ் தலைமை வகித்தாா். மத்திகோடு ஊராட்சித் தலைவா் அல்போன்ஸாள் முன்னிலை வகித்தாா்.
இதில், ஊ ராட்சி துணைத் தலைவா் ஜெனோ ரெனிட்டஸ், கருங்கல் தலைமைக் காவலா் ஜோலாா், காவலா் சிவராஜ் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.