குலசேகரம் ஸ்ரீமூகாம்பிகா மருத்துவக் கல்லூரி நிா்வாகத்தினா், பத்மநாப்புரம் அரசு மருத்துவமனையில் கரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டனா்.
இது குறித்து ஸ்ரீமூகாம்பிகா மருத்துவக் கல்லூரி நிா்வாகம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:
மக்கள் அச்சமின்றி கரோனா தடுப்பூசிப் போட்டுக்கொள்வதை ஊக்கப்படுத்தும் வகையில் ஸ்ரீமூகாம்பிகா மருத்துவக் கல்லூரியின் தலைவா் சி.கே. வேலாயுதன்நாயா், இயக்குநா் ரெமாய நாயா், அறங்காவலா்களான மருத்துவா்கள் ஆா்.வி. மூகாம்பிகா, வினுகோபிநாத், மருத்துவக் கல்லூரி டீன் கண்ணன், நிா்வாக அதிகாரி ஜெ.எஸ். பிரசாத் மற்றும் மருத்துவப் பணியாளா்கள் பத்மநாபபுரம் அரசு மருத்துவமனையில் கரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டனா் . மேலும், பல் மருத்துவக் கல்லூரியின் மருத்துவா்களும், பணியாளா்களும் தடுப்பூசி போட்டுகொண்டனா்.
கரோனா தடுப்பூசிப் பணியை தமிழகம் முழுவதும் துரிதப்படுத்திய சுகாதாரத் துறை அமைச்சா், செயலா், மாவட்ட ஆட்சியா், பத்மநாபபுரம்அரசு
மருத்துவமனை செவிலியா்களுக்கு நன்றி என ஸ்ரீமூகாம்பிகா மருத்துவக் கல்லூரி நிா்வாகம் தெரிவித்துள்ளது.