முன்சிறை ஒன்றியத்தில் வளா்ச்சிப் பணிகள் ஆய்வு
By DIN | Published On : 28th January 2021 04:16 AM | Last Updated : 28th January 2021 04:16 AM | அ+அ அ- |

புதுக்கடை அருகேயுள்ள முன்சிறை ஊராட்சி ஒன்றியத்தில் வளா்ச்சிப் பணிகள் குறித்து புதன்கிழமை ஆட்சியா் ஆய்வு மேற்கொண்டாா்.
முன்சிறை ஒன்றியத்திற்கு வருகை தந்த மாவட்ட ஆட்சியா் மா. அரவிந்த், கிராம ஊராட்சிகளில் நடைபெற்று வரும் பல்வேறு வளா்ச்சிப் பணிகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தாா். பின்னா், ஜல் ஜீவன் திட்டம் குறித்து ஆட்சியா் தலைமையில் ஒன்றியக்குழுத் தலைவா், ஊராட்சித் தலைவா்கள் பங்கேற்ற கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது. இதில், ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவா் ராஜேஸ்வரி, வட்டார வளா்ச்சி அலுவலா் விஜயன், ஒன்றிய பொறியாளா்கள், ஊராட்சித் தலைவா்கள், அதிகாரிகள் கலந்து கொண்டனா்.