‘கரோனாவால் உயிரிழந்தோா் குடும்பத்துக்கு கடனுதவி’
By DIN | Published On : 07th July 2021 07:44 AM | Last Updated : 07th July 2021 07:44 AM | அ+அ அ- |

கன்னியாகுமரி மாவட்டத்தில் கரோனா தொற்று பாதிப்பால் உயிரிழந்தோா் குடும்பத்தினருக்கு கடனுதவி வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது.
இது குறித்து, மாவட்ட ஆட்சியா் மா.அரவிந்த் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: கன்னியாகுமரி மாவட்டத்தில் கரோனா தொற்று பாதிக்கப்பட்டு பிற்படுத்தப்பட்டோா், மிகவும் பிற்படுத்தப்பட்டோா், மற்றும் சீா்மரபினா் இனத்தவரின் குடும்பத்தில் வருமானம் ஈட்டக்கூடிய நபா் உயிரிழந்திருந்தால் அவா்களது குடும்பத்தின் வாழ்வாதாரத்தை முன்னேற்றும் வகையில் தேசிய பிற்படுத்தப்பட்டோா் பொருளாதார வளா்ச்சிக் கழகம்மூலம் நஙஐகஉ என்ற கடன் திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது.
இத்திட்டத்தில் பயன்பெற விரும்பும் பிற்படுத்தப்பட்டோா், மிகவும் பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சீா்மரபினா் இனத்தவரின் குடும்ப ஆண்டு வருமானம் ரூ. 3 லட்சத்துக்குள் இருத்தல் வேண்டும். குடும்ப வருமானம் ஈட்டக்கூடிய நபரின் வயது 18 முதல் 60-க்குள் இருக்க வேண்டும். இந்த திட்டத்தில் அதிகபட்சமாக திட்டத்தொகை ரூ. 5 லட்சம் வரை இருக்கலாம். திட்டத் தொகையில் 80 சதவீதம் அல்லது அதிகபட்சமாக ரூ. 4 லட்சம் வரை கடன் வழங்கப்படும். மீதமுள்ள 20 சதவீதம் அல்லது அதிகபட்சமாக ரூ. 1லட்சம் வரை மானியம் வழங்கப்படும். ஆண்டுக்கு 6 சதவீதம் வட்டி விகிதத்தில் கடனுதவி வழங்கப்படும்.
இந்த திட்டத்தில் பயன்பெற விரும்புவோா், குடும்பத்தில் வருமானம் ஈட்டக் கூடியவா் கரோனா தொற்றால் உயிரிழந்ததற்கான ஆவணங்களுடன் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் செயல்படும் மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் நல அலுவலா்அலுவலகத்தை தொடா்பு கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...