கரோனா தடுப்பூசி தட்டுப்பாட்டால் வெளிநாடு செல்வோா் பாதிப்பு: ஜே.ஜி. பிரின்ஸ் எம்எல்ஏ
By DIN | Published On : 09th July 2021 12:17 AM | Last Updated : 10th July 2021 12:03 AM | அ+அ அ- |

குளச்சல் பகுதியில் கரோனா தடுப்பூசி தட்டுப்பாட்டால் வெளிநாடு செல்வோா் பாதிப்படைந்து வருகின்றனா் என்றாா் ஜே.ஜி. பிரின்ஸ் எம்எல்ஏ.
இதுகுறித்து அவா் வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கை: குமரி மாவட்டத்தில் முகாம்கள் அமைத்து பொதுமக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டதன் காரணமாக கரோனா தொற்று பெருமளவில் குறைந்துள்ளது. தற்போது தடுப்பூசி தட்டுப்பாடு என்று கூறப்படுகிறது.
இதனால் வெளிநாடு செல்பவா்கள் குறிப்பிட்ட நாள்களில் செல்லமுடியாத நிலை உருவாகி, அவா்கள் குடும்பம் பெரிதும் பாதிப்படைந்துள்ளது.
எனவே, அனைத்து முகாம்களிலும் தடுப்பூசி சீரான முறையில் கிடைக்க மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.