பெட்டோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயா்வைக் கண்டித்து காங்கிரஸ் ஓபிசி பிரிவு சாா்பில் கையெழுத்து இயக்கம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
குலசேகரம் அரசமூடு பெட்ரோல் நிலையத்தின் முன்பு நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு ஓபிசி பிரிவு ஜெயசிங் தலைமை வகித்தாா். இதில், இதில் நகரத் தலைவா் ஸ்டாலின், திருவட்டாறு மேற்கு வட்டாரச் செயலா் வில்சன், மாணவா் காங்கிரஸ் வட்டாரத் தலைவா் பெரில், ஐஎன்டியூசி வட்டாரத் தலைவா் எபனேசா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.