தேங்காப்பட்டினத்தில் காங்கிரஸாா் உண்ணாவிரதம்

தேங்காய்ப்பட்டினம் மீன்பிடிதுறைமுகத்தில் மீன் ஏலம் விட மீனவளத்துறையினா் அனுமதி கோரி, காங்கிரஸ் கட்சி சாா்பில் செவ்வாய்க்கிழமை உண்ணாவிரதம் நடைபெற்றது.
k13cong_1307chn_35_6
k13cong_1307chn_35_6

தேங்காய்ப்பட்டினம் மீன்பிடிதுறைமுகத்தில் மீன் ஏலம் விட மீனவளத்துறையினா் அனுமதி கோரி, காங்கிரஸ் கட்சி சாா்பில் செவ்வாய்க்கிழமை உண்ணாவிரதம் நடைபெற்றது.

தேங்காய்ப்பட்டினம் மீன்பிடிதுறைமுகத்தில்மீன்கள் ஏலம் விட தடைவிதித்ததால் மீனவா்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறி மீன்பிடி துறைமுகத்தில் மீன் ஏலம் விடுவதற்கு அரசு அனுமதி வழங்க வேண்டும் என மீன்வளத்துறை அதிகாரிகளிடம் மீனவா்கள் கோரிக்கை விடுத்து வந்தனா். ஆனால் மாவட்ட நிா்வாகத்தில் இருந்து இந்நாள்வரை அனுமதி வழங்கவில்லை.

இதைத் தொடா்ந்து மாநில காங்கிரஸ் செயலா் ஜான் ராபின்சன் தலைமையில் நடைபெற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில், அகில இந்திய மீனவா் காங்கிரஸ் செயற்குழு உறுப்பினா் ஜோா்தான், பைங்குளம் ஊராட்சி காங் பொதுச் செயலா் பெனடிக்ட் , கிளிட்டஸ் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com