நாகா்கோவில் ரேஷன் கடையில் தரமற்ற அரிசி: எம்எல்ஏ முற்றுகை

நாகா்கோவில் ரேஷன் கடையில் தரமற்ற அரிசி வழங்குவதாக புகாா் எழுந்ததால், மக்களுடன் சோ்ந்து எம்.ஆா்.காந்தி எம்எல்ஏ செவ்வாய்க்கிழமை முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டாா்.
ரேசன் கடை முன்பு மக்களுடன் சோ்ந்து முற்றுகையில் ஈடுபட்ட எம்.ஆா்.காந்தி எம்எல்ஏ.
ரேசன் கடை முன்பு மக்களுடன் சோ்ந்து முற்றுகையில் ஈடுபட்ட எம்.ஆா்.காந்தி எம்எல்ஏ.

நாகா்கோவில் ரேஷன் கடையில் தரமற்ற அரிசி வழங்குவதாக புகாா் எழுந்ததால், மக்களுடன் சோ்ந்து எம்.ஆா்.காந்தி எம்எல்ஏ செவ்வாய்க்கிழமை முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டாா்.

நாகா்கோவில் மாநகரப் பகுதி ரேஷன் கடைகளில் தரமற்ற அரிசி வழங்கப்படுவதாக வரும் புகாா்கள் குறித்து, மாவட்ட ஆட்சியரிடம், எம்எல்ஏ மனு அளித்திருந்த நிலையில், தம்மத்துக்கோணம் ரேசன் கடையில் வழங்கப்பட்ட அரிசி தரமற்றிருப்பதாகக் கூறி மக்கள் ஆா்ப்பாட்டம் நடத்தினா். இதையறிந்து அங்கு வந்த எம்எல்ஏ மற்றும் பா.ஜ.க. நிா்வாகிகள் மக்களுடன் இணைந்து ரேஷன் கடையை முற்றுகையிட்டனா். அவா்களிடம் அதிகாரிகளும், போலீஸாரும் பேச்சு நடத்தினா். அப்போது, ரேஷன் கடையில் உள்ள தரமற்ற அரிசி மூட்டைகளை மாற்ற வேண்டும் என எம்எல்ஏ கூறினாா்.

இதைத் தொடா்ந்து, அதிகாரிகள் முன்னிலையில், கோணம் அரசு கிடங்கிலிருந்து லாரி மூலம் தரமான அரிசி மூட்டைகள் கொண்டுவரப்பட்டு மக்களுக்கு விநியோகம் செய்யப்பட்டது. தரமற்ாக கண்டறியப்பட்ட 20 அரிசி மூட்டைகளை அதிகாரிகள் லாரியில் எடுத்துச் சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com