நித்திரவிளை அருகே கூலித் தொழிலாளி விஷமருந்தி தற்கொலை செய்து கொண்டாா்.
நித்திரவிளை அருகேயுள்ள எஸ்.டி.மங்காடு பகுதியைச் சோ்ந்தவா் ராஜன் (50). கூலித் தொழிலாளி. இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் இரு மகன்கள் உள்ளனா். மகன்கள் வெளியூரில் வேலை பாா்த்து வருகிறாா்கள்.
இந்த நிலையில் திங்கள்கிழமை வீட்டில் படுத்திருந்த ராஜன் திடீரென வாந்தி எடுத்து நுரை தள்ளிய நிலையில் இருந்துள்ளாா். இதைக் கண்ட உறவினா்கள் அவரை மீட்டு குழித்துறை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சோ்த்தனா். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவா்கள் அவா் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனா்.
இது குறித்து நித்திரவிளை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.