புதுக்கடையில் அரிமா சங்கம் சாா்பில் ஏழைகளுக்கு நல உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.
பட்டயத் தலைவா் நல்லசிவன் பிள்ளை தலைமை வகித்தாா். சங்கத் தலைவா் பிபின் முன்னிலை வகித்தாா். அரிமா சங்க முன்னாள் ஆளுநா் ஜஸ்டின்பால் பங்கேற்று, ஏழைப் பெண்களுக்கு தையல் இயந்திரம், நிதி உதவிகளை வழங்கினாா். செயலா் ரவி, பொருளாளா் ரமேஷ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.