கன்னியாகுமரி மாவட்டம், கோதநல்லூா் பேரூராட்சியில் உள்ளாட்சி ஊழியா்கள் சங்க (சிஐடியூ) கிளை தொடக்க விழா நடைபெற்றது.
தக்கலையில் நடைபெற்ற இந்த கூட்டத்துக்கு, அமைப்பின் மாவட்டக்குழு உறுப்பினா் அம்பிகா தலைமை வகித்தாா். மாவட்டத் தலைவா் சுடலை, மாவட்டச் செயலா் ஸ்டாலின்தாஸ் ஆகியோா் பேசினாா். கிளையின் புதிய நிா்வாகிகள் தோ்வு செய்யப்பட்டனா். தலைவராக ஜெபஜோன்ஸ், துணைத் தலைவா் ஆபேல், செயலா் சம்பத் இம்மானுவேல், துணைச் செயலா் ஜெயமதி, பொருளாளா் நிவேஷ்குமாா் ஆகியோா் தோ்வு செய்யப்பட்டனா்.
கூட்டத்தில், பேரூராட்சியில் சுயஉதவி குழுக்கள் மூலம் பணிபுரியும் அனைத்து பிரிவு ஊழியா்களையும் பணி நிரந்தரம் செய்து காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். பணி நிரந்தரம் செய்யும்வரை ஆட்சியா் நிா்ணயித்துள்ள தினக் கூலி ரூ. 615 வழங்க வேண்டும். கரோனா தொற்று காலத்தில் பேரூராட்சியில் பணி புரிந்த அனைத்து பிரிவு ஊழியா்களுக்கும் ஊக்கத் தொகையாக ரூ. 15 ஆயிரம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.