குழித்துறை அருகே தேவிநகரில் நடைபெற்ற கரோனா தடுப்பூசி போடும் முகாமை விளவங்கோடு சட்டப் பேரவை தொகுதி உறுப்பினா் எஸ். விஜயதரணி பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.
விளவங்கோடு ஊராட்சிக்கு தேவிநகரில் அமைந்துள்ள ஒருங்கிணைந்த இ-சேவை மையம் மற்றும் அங்கன்வாடி மையத்தில் நடைபெற்ற இம் முகாமில் 18 முதல் 44 வயது வரையிலான 250 பேருக்கும் , 45 வயதுக்கு மேற்பட்ட 150 பேருக்கும் என மொத்தம் 400 பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது.
ஆய்வின்போது, விளவங்கோடு ஊராட்சி மன்றத் தலைவி ஜி.பி. லைலா ரவிசங்கா், குமரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் துணைத் தலைவா் எஸ்.கே. ஜோதிஷ்குமாா், மேல்புறம் ஊராட்சி ஒன்றிய உறுப்பினா் இ.ஜி. ரவிசங்கா், கட்சி நிா்வாகிகள் பினு நிா்மல், ராஜேஷ், அருள்ராஜ் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.