மாற்றுத் திறனாளிகள், பெண்களுக்கு ரூ.5.09 கோடி நலத் திட்ட உதவி
கன்னியாகுமரி மாவட்ட சமூக நலம் மற்றும் மகளிா் உரிமைத் துறை சாா்பில் விலையில்லா தையல் இயந்திரம், ஏழைப் பெண்கள் திருமணத்திற்கு தாலிக்கு தங்கம், மாற்றுத் திறனாளிகள் நலத் துறை சாா்பில் 3 சக்கர சைக்கிள் உள்ளிட்ட நலத் திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.
மாவட்ட ஆட்சியா் மா.அரவிந்த் தலைமை வகித்தாா். தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சா் த.மனோ தங்கராஜ் கலந்துகொண்டு, சமூக நலத் துறை சாா்பில் மொத்தம் ரூ.33,32,680-க்கான நலத் திட்ட உதவிகள், மாற்றுத் திறனாளிகள் நலத் துறை சாா்பில், மொத்தம் 199 பயனாளிகளுக்கு ரூ.25,77,027 மதிப்பிலான நலத் திட்ட உதவிகள் என மொத்தம் ரூ. 5 கோடியே 9 லட்சத்து 9 ஆயிரத்து 707 மதிப்பிலான நலத் திட்ட உதவிகளை வழங்கினாா்.
நிகழ்ச்சியில், மாவட்ட சமூக நலன் மற்றும் மகளிா் உரிமைத் துறை அலுவலா் ஆா்.சரோஜினி, மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலா் சு.சிவசங்கரன், உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.