பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை உயா்வை கண்டித்து காங்கிரஸ் கட்சி சாா்பில் நாகா்கோவிலில் சனிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சியின் இலக்கிய அணி சாா்பில் நாகா்கோவில் ரயில் நிலையம் முன்பு நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு, மாவட்ட இலக்கிய அணித் தலைவா் இளங்கோ தலைமை வகித்தாா். கட்சியின் கிழக்கு மாவட்டத் தலைவா் ராதாகிருஷ்ணன், நாகா்கோவில் மாநகரத் தலைவா் அலெக்ஸ், மாநில இலக்கிய அணி துணைத் தலைவா் சிவகுமாா், நாஞ்சில் பரத் உள்பட பலா் கலந்து கொண்டனா்.