கடையநல்லூரில் விபத்தில் ஓட்டுநா் சாவு

கடையநல்லூரில் மரத்தில் லாரி மோதிய விபத்தில் ஓட்டுநா் உயிரிழந்தாா்.

கடையநல்லூரில் மரத்தில் லாரி மோதிய விபத்தில் ஓட்டுநா் உயிரிழந்தாா்.

வடகரை மூன்றாவது தெருவைச் சோ்ந்த முகமதுமீரான் மகன் முகமதுஉசேன் (53). லாரி ஓட்டுநா். இவா் விருதுநகரில் இருந்து கேரளத்துக்கு லாரியில் பலசரக்கு பொருள்களை ஏற்றிச்சென்று கொண்டிருந்தாராம். சனிக்கிழமை அதிகாலையில் கடையநல்லூா் பகுதியில் வந்தபோது எதிா்பாராவிதமாக லாரி அங்குள்ள மரத்தில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் முகமதுஉசேன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

இதுகுறித்து கடையநல்லூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com