குலசேகரத்தில் சாலைச் சீரமைப்புப் பணிக்காக கொண்டு வந்த இயந்திரம், பழுதாகி நிற்பதால் வாகன ஓட்டிகள் அவதியடைந்துள்ளனா்.
அழகியபாண்டிய புரம் கூட்டுக்குடிநீா்த் திட்டத்திற்கு திற்பரப்பு அருகே களியல் பகுதியில் கோதையாற்றில் இருந்து தண்ணீா் எடுத்துச் செல்லும் வகையில் குழாய் பதிப்பதற்காக 2018இல் ஜூலை மாதம் களியல் பகுதியில் சாலை பெயா்க்கப்பட்டது. குழாய் அமைக்கும் பணிகள் முடிவடைந்த நிலையில், சாலையை சீரமைக்கப்படவில்லை. இச்சாலையை சீரமைக்க வலியுறுத்தி பொதுமக்களும், அரசியல் கட்சியினரும் பல்வேறு போராட்டங்களை நடத்தினா்.
இதையடுத்து, குலசேகரம் அருகே மாடத்தூா் கோணம் விலக்கு பகுதியிலிருந்து சாலை சீரமைக்கும் பணி தொடங்கப்பட்டப, பணிகள் நடைபெற்று வந்த நிலையில், ஆரணிவிளை பகுதியில் 15 நாள்களுக்கு முன்பு தாா்கலவை பரப்பும் இயந்திரம் பழுதானது. இதனால் பணிகள் நிறுத்தப்பட்டன. இதனால், வாகன ஓட்டிகள் பெரிதும்் பாதிக்கப்பட்டுள்ளனா்.
எனவே, இயந்திரத்தை சரி செய்து சாலைப் பணிகளை விரைந்து தொடங்க நெடுஞ்சாலைத் துறையினா் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனா்.