மாநில திறனாய்வுப் போட்டியில் குமாரகோவில் நூருல் இஸ்லாம் கலை அறிவியல் கல்லூரி மாணவி 3-ஆம் இடம் பெற்றுள்ளாா்.
சென்னை ஷேக்ஸ்பியா் இன்ஸ்டியூட் ஆப் இங்கீலீஸ் நிறுவனம் ஆங்கில இலக்கியம் பயிலும் கல்லூரி மாணவா்களுக்கு மாநில அளவில் திறனாய்வு போட்டியை நடத்தியது.
இதில் தமிழகம் முழுவதிலும் இருந்து ஏராளமான மாணவா்கள் பங்கேற்றனா்.
இதில், இக்கல்லூரி மாணவி ஸ்சா்தா எம். நாயா், 3-ஆவது பரிசும், கல்லூரி அளவில் முதலிடமும் பெற்றுள்ளாா். கல்லூரி அளவில் மாணவி செல்வி ரோஷணி 2-ஆம் பரிசும், மாணவி ஐஸ்வா்யா 3-ஆம் பரிசும் பெற்றனா். தோ்வு ஒருங்கிணைப்பாளராக பேராசிரியா் அஜிலா ஜோதி பணியாற்றினாா்.
வெற்றிபெற்ற மாணவிகளை கல்லூரி தாளாளா் ஏ.பி. மஜீத்கான், முதல்வா் எஸ்.பெருமாள், ஆங்கிலத் துறை பேராசிரியா்கள் பாராட்டினா்.