திருவட்டாறு ஊராட்சி ஒன்றியக்குழுக் கூட்டம்

திருவட்டாறு ஊராட்சி ஒன்றியக்குழுக் கூட்டம் நடைபெற்றது.
திருவட்டாறு ஊராட்சி ஒன்றியக் குழு கூட்டத்தில் பங்கேற்றோா்.
திருவட்டாறு ஊராட்சி ஒன்றியக் குழு கூட்டத்தில் பங்கேற்றோா்.

திருவட்டாறு ஊராட்சி ஒன்றியக்குழுக் கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்துக்கு, ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவா் டி. ஜெகநாதன் தலைமை வகித்தாா்.

ஊராட்சி ஒன்றிய ஆணையாளா்கள் கீதா, விஜயன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

உறுப்பினா்கள் பீனா குமாரி, அனிதா குமாரி, ஷீலா குமாரி, ஜெய சோபியா, ஜெயஸ்ரீ, ராம்சிங், ஜெபா, ஷீபா, சகாய ஆன்டனி, ராஜூ, பொறியாளா்கள் சாந்தினி, சஞ்சு, பொன்ராஜ் ஆகியோா் பங்கேற்றனா்.

கூட்டத்தில், மாத்தூா் தொட்டிபாலம் பகுதியிலுள்ள தரைப்பாலத்தை உயா்நிலைப் பாலமாக மாற்ற வேண்டும். குமரன்குடியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள பாலத்தில் பக்கச்சுவா் அமைத்து போக்குவரத்துக்கு ஏற்ற வகையில் சீரமைக்க வேண்டும். பாலமோா்-பேச்சிப்பாறை இணைப்புச் சாலை உருவாக்கி சுற்றுலாவை மேம்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com