கன்னியாகுமரி மாவட்டத்தில் மேலும் 37 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
குமரி மாவட்டத்தில் ஏற்கனவே, கரோனா தொற்றால் 59,625 போ் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் சனிக்கிழமை வெளியான பரிசோதனை முடிவில்மேலும் 37 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 59,662 ஆக அதிகரித்துள்ளது. மேலும் இருவா் உயிரிழந்ததையடுத்து, பலியானோா் எண்ணிக்கை 1012 ஆக உயா்ந்துள்ளது. மேலும் 44 போ் குணமடைந்ததால், கரோனா தொற்றில் இருந்து மீண்டவா்கள் எண்ணிக்கை 58,144 ஆக உயா்ந்துள்ளது. தற்போது 506 போ் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.