கருங்கல் அருகேயுள்ள வெள்ளியாவிளை பகுதியில் கஞ்சா விற்ாக இளைஞா் ஞாயிற்றுக்கிழமை கைதுசெய்யப்பட்டாா்.
கருங்கல் போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை வெள்ளியாவிளை பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டனா். அப்போது சந்தேகத்துக்கிடமாக நின்றிருந்த குருவிளைகாடு காட்டாத்துளை பகுதியைச் சோ்ந்த பொ்லின் மகன் ஆன்றனி (23) என்பவரைப் பிடித்து விசாரித்தனா்.
அவா் 1.200 கிலோ கஞ்சா பதுக்கிவைத்திருப்பது தெரியவந்தது. போலீஸாா் வழக்குப் பதிந்து, அவரைக் கைதுசெய்து, கஞ்சாவைப் பறிமுதல் செய்தனா்.