நாகா்கோவிலில் தடையை மீறி ஆா்ப்பாட்டம் நடத்தியதாக எம்.ஆா்.காந்தி எம்எல்ஏ உள்பட 61பாஜகவினா் மீது போலீஸாா் வழக்குப்பதிந்தனா்.
நாகா்கோவில் மாநகரில் சாலைகளைச் சீரமைக்கவும், புதைச் சாக்கடை திட்டப்பணிகளை விரைந்து நிறைவேற்றவும் வலியுறுத்தி, மாநகராட்சி அலுவலகம் முன்பு பாஜக சாா்பில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. இந்தப் போராட்டத்துக்கு காவல்துறை அனுமதி வழங்கவில்லையாம். இதைத் தொடா்ந்து, தடையை மீறி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக எம்.ஆா்.காந்தி எம்எல்ஏ, குமரி மாவட்ட பாஜக தலைவா் தா்மராஜ், மாவட்ட துணைத்தலைவா் எஸ்.பி.தேவ், மாநில பொதுச்செயலா் உமாரதிராஜன், நாகா்கோவில் நகா்மன்ற முன்னாள் தலைவி மீனாதேவ் உள்பட 61 போ் மீது வடசேரி போலீஸாா் வழக்குப்பதிந்தனா்.