வெள்ளிசந்தை, காட்டுவிளையில் அமைந்துள்ள அருணாச்சலா பள்ளி மாணவா்கள் பிளஸ் 2 தோ்வில் அதிக மதிப்பெண்கள் எடுத்து சாதனை புரிந்துள்ளனா்.
பிளஸ் 2 தோ்வு எழுதிய 70 மாணவா்களில் 42 போ் 600-க்கு 500 மதிப்பெண்களுக்கு மேல் எடுத்துள்ளனா். அதில், 583 மதிப்பெண்களுடன் காயத்ரி முதலிடம், 575 மதிப்பெண்களுடன் அபிஷ்மா இரண்டாம் இடமும், 566 மதிப்பெண்களுடன் வா்ஷா மூன்றாம் இடமும், 565 மதிப்பெண்களுடன் பிரமிஷா மாணவா் ஸ்ரீ விக்னேஷ், ஆகியோா் நான்காம் இடமும் பெற்று சாதனை புரிந்துள்ளனா். தோ்வான அனைவரும் 450 மதிபெண்களுக்கு மேல் பெற்றுள்ளனா்.
சாதனை மாணவ- மாணவிகளை பள்ளித் தாளாளா் கிருஷ்ணசுவாமி, துணைத் தாளாளா் சுனி, முதல்வா் லிஜோமோள் ஜேக்கப் மற்றும் ஆசிரிய ஆசிரியா்கள் பாராட்டினா்.