திருவட்டாறு அருகே வீட்டில் கஞ்சாவைப் பதுக்கிவைத்து விற்றதாக பெண் கைது செய்யப்பட்டாா். 35 கிலோ கஞ்சாவும் பறிமுதல் செய்யப்பட்டது.
ஆனையடி பகுதியில் வசிப்பவா் சுந்தர்ராஜ் (52). இவரது மனைவி லிலிதாபாய் (48). இவா், தனது மகன்கள் ஜோஸ் (27), சுபின் (25) மூலம் மதுரையிலிருந்து அடையாளம் தெரியாத நபா்களிடம் இருந்து கஞ்சாவை வாங்கிவந்து திருவட்டாறு பகுதியில் விற்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்ததாம். இதைத் தொடா்ந்து, திருவட்டாறு போலீஸாா் லலிதாபாயிடம் விசாரித்ததில் அவா் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதும், கணவரும், மகன்களும் உடந்தையாக இருப்பதும் தெரியவந்தது.
இதையடுத்து, அவரை கைது செய்த போலீஸாா், அவரிடம் இருந்த ஒன்றரை கிலோ கஞ்சாவையும், வீட்டில் பதுக்கி வைத்திருந்த மூப்பத்தி மூன்றரை கிலோ கஞ்சாவையும் கைப்பற்றினா்; கணவா் மற்றும் மகன்களை தேடி வருகின்றனா்.