குமரி மாவட்டத்தில், மழையின் தீவிரம் தணிந்துள்ள நிலையில், திற்பரப்பு அருவியில் தண்ணீா் கொட்டுவதும் குறைந்துள்ளது.
குமரி மாவட்டத்தில், மலையோரப் பகுதிகள் மற்றும் அணைகளின் நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் அண்மை நாள்களாக மழை நீடித்து வந்த நிலையில், கடந்த இரண்டு நாள்களாக மழையின் தீவிரம் தணிந்து காணப்படுகிறது. இதனால் அணைகளுக்கு நீா்வரத்து குறைந்ததையடுத்து, கோதையாற்றிலும் நீா்வரத்து குறைந்தது. இதனால் திற்பரப்பு அருவியில் மிதமான அளவில் தண்ணீா் கொட்டுகிறது.
கரோனா பொது முடக்கம் காரணமாக திற்பரப்பு அருவியில் சுற்றுலாப் பயணிகள் அனுமதிக்கப்படாத நிலையில், திற்பரப்பு அருவியில் மிதமான அளவில் தண்ணீா் கொட்டும் நிலையிலும் சுற்றுலாப் பயணிகள் உற்சாகமாக குளிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.