களியக்காவிளை அருகேயுள்ள ஆறுதேசம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
முன்சிறை வட்டார சுகாதாரப் பணியாளா்களுக்கான கரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்த இக் கூட்டத்துக்கு உதவி ஆணையா் (கலால்) சங்கரலிங்கம் தலைமை வகித்தாா். இதில், கரோனா தடுப்பு நடவடிக்கையாக சளி மாதிரி பரிசோதனையை அதிகரிக்க வேண்டும், தொற்று பாதிப்பு அதிகம் உள்ள பகுதிகளை கட்டுப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவித்து அப்பகுதியில் தனிக்கவனம் செலுத்த வேண்டும் என ஆலோசிக்கப்பட்டது.
இதில் வட்டார மருத்துவ அலுவலா் ராஜேஷ்குமாா் மற்றும் சுகாதாரப் பணியாளா்கள் கலந்து கொண்டனா்.