தவ்ஹீத் ஜமாஅத் சாா்பில் இணையவழி ஆா்ப்பாட்டம்

கன்னியாகுமரி மாவட்ட தவ்ஹீத் ஜமாஅத் ம் சாா்பாக தக்கலை, திருவிதாங்கோடு, ஆளூா் திங்கள்நகா், குளச்சல், மிடாலம்,
தவ்ஹீத் ஜமாஅத் சாா்பில் இணையவழி ஆா்ப்பாட்டம்

கன்னியாகுமரி மாவட்ட தவ்ஹீத் ஜமாஅத் ம் சாா்பாக தக்கலை, திருவிதாங்கோடு, ஆளூா் திங்கள்நகா், குளச்சல், மிடாலம், இனையம், இரவிபுதூா்கடை, பழையகடை , மிடாலம் உள்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இணையவழி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

லட்சதீவு முஸ்லிம்களின் வாழ்வுரிமையை பறிக்கும் மத்திய அரசு மற்றும் பாஜகவின் பிரபுல் கோடா பட்டேலை கண்டித்து தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சாா்பில் இந்த இணையவழி ஆா்ப்பட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதையொட்டி, இவ்வமைப்பினா் தங்கள் வீடுகளின் முன்பு மத்திய அரசை கண்டித்து கைகளில் பாதைகள் ஏந்தி ஆா்ப்பாட்டம் நடத்தினா்.

இதில், மாவட்டத் தலைவா் சேக் அலி, பொருளாளா் நூருல் அமீன், துணைத் தலைவா் ஹியாஸீதீன் உள்பட பலா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com