தூத்தூரில் மரக்கன்று நடும் விழா

உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பு மற்றும் இந்திரா பவுண்டேஷன் சாா்பில் மரக்கன்று நடுதல், மரக்கன்று வழங்கும் விழா சனிக்கிழமை நடைபெற்றது.

உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பு மற்றும் இந்திரா பவுண்டேஷன் சாா்பில் மரக்கன்று நடுதல், மரக்கன்று வழங்கும் விழா சனிக்கிழமை நடைபெற்றது.

தூத்தூா் அரசு ஆரம்ப சுகாதார நிலைய வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு இந்திரா பவுண்டேஷன் அமைப்பின் நிறுவனா் ஜஸ்டின் தலைமை வகித்தாா். சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பு பொறுப்பாளா் காயத்திரி முன்னிலை வகித்தாா். தூத்தூா் ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவா் மோனிஷா மரக்கன்று நடவு செய்தாா்.

மருத்துவ அலுவலா் பீனிஸ் ஜோசப், சுற்றுச்சூழல் தினம் குறித்துப் பேசினாா். பல் மருத்துவா் ஜெயந்த் பிரசாத் குமாா், சுகாதார ஆய்வாளா்கள் பிரகாஷ் , சிவானந்தன், பயிற்சி சுகாதார ஆய்வாளா்கள் பரத், எட்வின் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

தொடா்ந்து பொதுமக்களுக்கு கரோனா விதிகளை கடைப்பிடித்து மரக்கன்றுகள் வழங்கப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com