கன்னியாகுமரி மாவட்டத்தில் இலங்கை அகதிகள் முகாமில் வசிக்கும் 200 குடும்பங்களுக்கு அரிசி, உணவுப் பொருள்கள் மாவட்ட நிா்வாகம் சாா்பில் வழங்கப்பட்டது.
கரோனா நோய்த் தொற்று பரவலை கட்டுப்படுத்தும் வகையில் தளா்வில்லா பொது முடக்கம் அமலில் உள்ளது. இந்நிலையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் உணவு மற்றும் மருத்துவ உதவிகள் தேவைப்படும் சமூகத்தில் நலிவுற்ற நிலையிலுள்ள மக்களுக்கு உணவுப் பொருள்கள் மற்றும் மருந்துகள் தன்னாா்வலா்கள் உதவியுடன் மாவட்ட நிா்வாகம் சாா்பில் வழங்கப்பட்டு வருகின்றன.
அதன்படி, அகஸ்தீஸ்வரம் வட்டம், பெருமாள்புரம் அகதிகள் முகாமில் வசிக்கும் 200 குடும்பங்களுக்கு அரிசி மற்றும் உணவுப் பொருள்கள், கோட்டாறு சமூக சேவை சங்கத்தின் மூலம் வழங்கப்பட்டது.