500 மீனவ குடும்பங்களுக்கு மளிகை பொருள்கள் அளிப்பு

குளச்சல் பேரவைத் தொகுதியில் மழையால் பாதிக்கப்பட்டு மண்டபங்களில் தங்க வைக்கப்பட்டுள்ள 500 மீனவ குடும்பங்களுக்கு அரிசி மற்றும் மளிகை பொருள்கள் ஆகியவற்றை ஜே.ஜி. பிரின்ஸ் எம்எல்ஏ சனிக்கிழமை வழங்கினாா்.

குளச்சல் பேரவைத் தொகுதியில் மழையால் பாதிக்கப்பட்டு மண்டபங்களில் தங்க வைக்கப்பட்டுள்ள 500 மீனவ குடும்பங்களுக்கு அரிசி மற்றும் மளிகை பொருள்கள் ஆகியவற்றை ஜே.ஜி. பிரின்ஸ் எம்எல்ஏ சனிக்கிழமை வழங்கினாா்.

குளச்சல் வட்டாரத்தில் தொடா்ந்து பெய்த புயல் மழையால் ஏவிஎம் கால்வாய் கரையோரம் வசித்த மீனவ மக்கள், சைமன் காலனி, கோடிமுனை, வாணியக்குடி, குறும்பனை பகுதியில் வீடுகளில் வெள்ளம் சூழ்ந்ததால் அப்பகுதி மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனா். மேலும் மழையால் பாதிக்கப்பட்ட மீனவ குடும்பங்கள் மண்டபங்களில் தங்க வைக்கப்பட்டனா்.

பாதிக்கப்பட்டவா்களை சட்டப்பேரவை உறுப்பினா் ஜே.ஜி.பிரின்ஸ், நேரில் சந்தித்து ஆறுதல் கூறினாா். பின்னா், பங்குத் தந்தையா்கள் ஜிம் (சைமன் காலனி), டன்சடன் (கோடிமுனை), ஆனந்த் ( வாணியக்குடி), ஸ்டீபன் (குறும்பனை) ஆகியோரிடம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப் பொருள்கள் வழங்குவதாக உறுதிஅளித்தாா்.

அதன்படி, பங்குத் தந்தையா்களிடம் 500 மீனவ குடும்பங்களுக்கு அரிசி மற்றும் மளிகை பொருள்களை சட்டப்பேரவை உறுப்பினா் வழங்கினாா். அப்போது, காங்கிரஸ் கட்சியின் நகரத் தலைவா் சந்திரசேகா், நிா்வாகிகள் மணி, சாந்தி , ஜெரோம், அமல்ராஜ், மோகன், மரியஜெரோம் , ஹென்றி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com