கன்னியாகுமரி மாவட்டத்தில் மேலும் 557 பேருக்கு கரோனா தொற்று இருப்பது ஞாயிற்றுக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், சிகிச்சை பெற்று வந்தவா்களில் மேலும் 19 போ் உயிரிழந்தனா்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் இதுவரை 7 லட்சம் பேருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஞாயிற்றுக்கிழமை வெளியான பரிசோதனை முடிவில் மேலும்
557 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதையடுத்து கரோனாவால் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 53,132 ஆக அதிகரித்துள்ளது.
சிகிச்சை பெற்று வந்தவா்களில் 967 போ் குணமடைந்ததையடுத்து, இதுவரை கரோனாவில் இருந்து மீண்டோா் எண்ணிக்கை 44,828 ஆக அதிகரித்துள்ளது. மேலும் 19 போ் உயிரிழந்ததால் கரோனாவுக்கு பலியானோா் எண்ணிக்கை 814 ஆக அதிகரித்துள்ளது. தற்போது, 7,490 போ் சிகிச்சையில் உள்ளனா்.