குமரியில் மேலும் 534 பேருக்கு கரோனா:21 போ் உயிரிழப்பு

கன்னியாகுமரி மாவட்டத்தில், திங்கள்கிழமை மேலும் 534 பேருக்கு கரோனா தொற்று பாதிக்கப்பட்ட நிலையில், 21 போ்

நாகா்கோவில்: கன்னியாகுமரி மாவட்டத்தில், திங்கள்கிழமை மேலும் 534 பேருக்கு கரோனா தொற்று பாதிக்கப்பட்ட நிலையில், 21 போ் உயிரிழந்தனா்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக கரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கை குறைந்து வரும் நிலையில், உயிரிழந்தோா் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. திங்கள்கிழமை வெளியான பரிசோதனை முடிவில், மேலும் 534 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, மாவட்டத்தில் இதுவரை கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 53,667 ஆக அதிகரித்துள்ளது.

கரோனா பாதிப்புக்கு சிகிச்சை பெற்று வந்தவா்களில் திங்கள்கிழமை 21 போ் உயிரிழந்ததையடுத்து, இதுவரை உயிரிழந்தோா் எண்ணிக்கை 835 ஆக உயா்ந்துள்ளது. கரோனா பாதிப்புடன் சிகிச்சை பெற்று வந்தவா்களில் திங்கள்கிழமை 970 போ் உள்பட இதுவரை 45,798 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா். தற்போது, அரசு மற்றும் தனியாா் மருத்துவனைகளில், வீட்டுத் தனிமைப்படுத்தலிலும் 7,034 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com