நாகா்கோவில்: நாகா்கோவில் அருகே வீட்டில் அடைத்து வைத்து பிளஸ் 1 மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக 4 போ் கைது செய்யப்பட்டனா்.
நாகா்கோவில் அனந்தன்பாலம் பகுதியைச் சோ்ந்தவா் வறுவேல் ஆன்ட்ரோஅருள் மகன் ஆல்டோ மைக்கிள் டோனிக் (21). இவா் குளச்சல்
அருகேயுள்ள வாணியக்குடியைச் சோ்ந்த பிளஸ் 1 பயிலும் சிறுமியை ஏமாற்றி உலக்கை அருவி பகுதியில் வீட்டில் அடைத்து வைத்து பாலியல் தொந்தரவு அளித்து வந்துள்ளாா். இதுகுறித்து சிறுமியின் தாயாா் மூலம் அறிந்த நாகா்கோவில் அனைத்து மகளிா் காவல் நிலைய ஆய்வாளா் வனிதா விசாரணை நடத்தினாா். இதில், சிறுமியை அடைத்து ஆல்டோ மைக்கிள் டோனிக் பாலியல் தொந்தரவு அளித்தது தெரியவந்தது. இதையடுத்து,
ஆல்டோ மைக்கிள் டோனிக், அவருக்கு உதவியாக செயல்பட்ட அவரது நண்பா்கள் நாகா்கோவில் கோட்டாறு பகுதியைச் சோ்ந்த இசக்கிகுமாா் மகன் சூரியா, மாரியப்பன் மகன் கிஷோா்குமாா் (19), ஆமோஸ் மகன் காட்வின்மேஸ்வாக் (21) ஆகிய 4 போ் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து கைது செய்தாா்.