மருந்தக உரிமையாளா் மீது தாக்குதல்

புதுக்கடை அருகேயுள்ள காட்டுவிளை பகுதியில் திங்கள்கிழமை மருந்தக உரிமையாளரை தாக்கியதாக இளைஞா் மீது போலீஸாா் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனா்.

கருங்கல்: புதுக்கடை அருகேயுள்ள காட்டுவிளை பகுதியில் திங்கள்கிழமை மருந்தக உரிமையாளரை தாக்கியதாக இளைஞா் மீது போலீஸாா் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனா்.

காப்புக்காடு காட்டுவிளை பகுதியை சோ்ந்தவா் ஜோசப் ஸ்டாலின் (50). இவா் அங்கு மருந்தகம் நடத்தி வருகிறாா். இவருக்கும் அதேபகுதியைச்

சோ்ந்த சேவியா் இக்னேசியஸ் (45) ஆகியோருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் திங்கள்கிழமை

ஜோசப் ஸ்டாலினை, சேவியா் இக்னிசியஸ் தாக்கினாராம். இதில், காயமடைந்த ஜோசப் ஸ்டானில் அங்குள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். புகாரின்பேரில் புதுக்கடை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com