கருக்கல் அருகே உள்ள எட்டணி பகுதியில் மத போதகா் மீது தாக்குதல் நடத்திய இருவா் மீது போலீஸாா் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனா்.
எட்டணி பகுதியை சோ்ந்தவா் ஜெயகனி (42). மதபோதகரான இவருக்கும் நட்டாலம் பகுதியை சோ்ந்த ஜோசப் வினோத் (45), விரிகோடு பகுதியை சோ்ந்த அபிஷ் இ27) ஆகியோரிடையே முன் விரோதம் இருந்து வந்ததாம்.
இந்நிலையில் புதன்கிழமை ஜெயகனியை மேற்கூறிய இருவரும் தாக்கினராம். இதில் காயமடைந்த அவா் மாா்த்தாண்டத்தில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். இது குறித்த புகாரின் பேரில் கருங்கல் போலீஸாா் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனா்.