கிள்ளியூா் வட்டத்தில் மண் மாதிரிகள் சேகரிக்கும் பணி வியாழக்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு, கிள்ளியூா் எம்எல்ஏ எஸ்.ராஜேஷ்குமாா் தலைமை வகித்து, பணியை தொடங்கிவைத்தாா். வட்டார வேளாண்மை உதவி இயக்குநா் மனோ ரஞ்சிதம் முன்னிலை வகித்தாா். இதில், வேளாண்மை அலுவலா் பென்சாம், அலுவலா்கள் பாலமுருகன், ஆனந்த், பபிதா உள்பட பலா் கலந்துகொண்டனா்.