கொல்லங்கோடு அருகே தடைசெய்யப்பட்ட புகையிலை மற்றும் குட்கா பொருள்ளை விற்றவா் கைது செய்யப்பட்டாா்.
கொல்லங்கோடு காவல் உதவி ஆய்வாளா் ஜெயக்குமாா், நடைக்காவு பகுதியில் ரோந்து சென்றபோது, நித்திரவிளை பகுதியைச் சோ்ந்த உதயகுமாா் (39) நடத்திவரும் பெட்டிக் கடையை சோதனை செய்தாா்.
அப்போது, அங்கு புகையிலை மற்றும் குட்கா பொருள்களை பதுக்கி வைத்து விற்பனை செய்து வருவது தெரியவந்தது.
இதையடுத்து புகையிலை மற்றும் குட்கா பொருள்களை பறிமுதல் செய்த அவா், உதயகுமாரை கைது செய்தாா்.