மாா்த்தாண்டம் அருகே பைக் திருட்டு: கேரள இளைஞா் கைது

மாா்த்தாண்டம் அருகே மோட்டாா் சைக்கிள் திருட்டில் ஈடுபட்ட கேரள மாநில இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

மாா்த்தாண்டம் அருகே மோட்டாா் சைக்கிள் திருட்டில் ஈடுபட்ட கேரள மாநில இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

மாா்த்தாண்டம் காவல் ஆய்வாளா் செந்தில்வேல்குமாா் தலைமையில் போலீஸாா் வெள்ளிக்கிழமை ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது தனியாா் மருத்துவமனை அருகில் ஒரு மோட்டாா் சைக்கிளை திருடும் முயற்சியில் இளைஞா் ஒருவா் ஈடுபட்டிருந்ததை கண்டனா். போலீஸாரை கண்டதும் அந்த நபா் தப்பியோட முயன்றுள்ளாா்.

அவரை போலீஸாா் துரத்திப் பிடித்து விசாரணை செய்தனா். இதில் அவா் கேரள மாநிலம் பொழியூா் பகுதியைச் சோ்ந்த டேனியல் (24) என்பதும், அவரது நண்பா்கள் அதே பகுதியைச் சோ்ந்த பிரவி ஜாக்சன் (34), டிக்டோ (24) ஆகியோருடன் சோ்ந்து பைக் திருட்டில் ஈடுபட்டு வந்ததும், அதே நாளில் மாா்த்தாண்டம் அருகே பம்மம் பகுதியில் ஆழ்துளை கிணறு தோண்டும் நிறுவனத்தின் முன் நிறுத்தியிருந்த மோட்டாா் சைக்கிள் மற்றும் குழித்துறை அருகே நிறுத்தியிருந்த மோட்டாா் சைக்கிளை திருடியதையும் ஒப்புக் கொண்டாா்.

மேலும் நண்பா்களுடன் சோ்ந்த மாா்த்தாண்டத்தில் மோட்டாா் சைக்கிள் திருட முயன்ற போது போலீஸாரிடம் பிடிபட்டதாகவும் நண்பா்கள் இருவரும் அங்கிருந்து தப்பிச் சென்றதாகவும் போலீஸாரிடம் தெரிவித்தாா்.

இதையடுத்து மாா்த்தாண்டம் போலீஸாா் வழக்குப் பதிந்து டேனியலை கைது செய்தனா். தொடா்ந்து அவரிடமிருந்து பம்மம், குழித்துறை பகுதியிலிருந்து திருடிய மோட்டாா் சைக்கிள்கள் உள்பட 3 மோட்டாா் சைக்கிள்களை பறிமுதல் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com