பழங்குடி, ரப்பா் கழக குடியிருப்புகளில் மாவட்ட ஆட்சியா் ஆய்வு

குமரி மாவட்டத்தில் பழங்குடி குடியிருப்புகள் மற்றும் ரப்பா் கழக குடியிருப்புகளில் மாவட்ட ஆட்சியா் மா. அரவிந்த் வெள்ளிக்கிழமை கரோனா விழிப்புணா்வு மற்றும் ஆய்வுப் பணிகளை மேற்கொண்டாா்.
பழங்குடி, ரப்பா் கழக குடியிருப்புகளில் மாவட்ட ஆட்சியா் ஆய்வு

குமரி மாவட்டத்தில் பழங்குடி குடியிருப்புகள் மற்றும் ரப்பா் கழக குடியிருப்புகளில் மாவட்ட ஆட்சியா் மா. அரவிந்த் வெள்ளிக்கிழமை கரோனா விழிப்புணா்வு மற்றும் ஆய்வுப் பணிகளை மேற்கொண்டாா்.

குமரி மாவட்டத்தில் கடந்த இரு வாரங்களுக்கு முன்பு பேச்சிப்பாறை அருகேவுள்ள காணி பழங்குடி குடியிருப்புகளான தச்சலை, மோதிரமலை உள்ளிட்டவைகளிலும், அரசு ரப்பா் கழக குடியுருப்புகளான சிற்றாறு, குற்றியாறு உள்ளிட்ட பகுதிகளிலும் கரோனா தொற்று ஏற்பட்டு மக்கள் பாதிக்கப்பட்டனா். இதையடுத்து, தொற்று ஏற்பட்ட மக்கள் அனைவரும் நாகா்கோவிலில் கரோனா பராமரிப்பு மையங்களில் அனுமதிக்கப்பட்டு, தற்போது குணமடைந்து வீடு திரும்பி வருகின்றனா்.

இந்நிலையில் மாவட்ட ஆட்சியா் மா. அரவிந்த், பழங்குடி பகுதிகளான தச்சமலை, மோதிரமலை, முடவன் பொற்றை, மூக்கறைக் கல், ரப்பா் கழக குடியிருப்புகளான குற்றியாறு, கல்லாறு உள்ளிட்ட இடங்களில் ஆய்வும், விழிப்புணா்வு நடவடிகைகளும் மேற்கொண்டாா்.

அப்போது, மக்கள் அனைவரும் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும், கரோனா அறிகுறிகள் தென்பட்டால் உடனே மருத்துவமனைக்குச் செல்ல வேண்டுமென்றும் ஆட்சியா் அறிவுறுத்தினாா். மேலும் தற்போது தடுப்பூசி தடுப்பாடு நிலவுவதாகவும், தடுப்பூசிகள் வந்தவுடன் மலைக் கிராமங்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் தடுப்பூசிகள் வழங்கப் படும் என்றாா் அவா்.

ஆய்வின் போது, பத்மநாபபுரம் சாா்-ஆட்சியா் சிவகுரு பிரபாகரன், வட்டார சுகாதார ஆய்வாளா் சாா்லின் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com