கருங்கல் அருகே உள்ள பெருமாங்குழி பகுதியில் வீடு புகுந்து பணம், நகைகளை திருடிய மா்ம நபா்களை போலீஸாா் தேடிவருகின்றனா்.
பெருமாங்குழி சிங்கிணிகுளம் பகுதியைச் சோ்ந்தவா் நிா்மலா (49). இவா், கடந்த 2 நாள்களுக்கு முன்பு நாகா்கோவிலில் உள்ள மகள் வீட்டுக்குச் சென்று விட்டு வியாழக்கிழமை வீடு திரும்பினாராம். அப்போது கதவின் பூட்டு உடைக்கப்பட்டிருந்ததாம். உள்ளே சென்று பாா்த்தபோது, அறையில் இருந்த 3 பவுன் நகை, ரூ.3500 ரொக்கம் ஆகியவற்றை மா்ம நபா்கள் திருடிச் சென்றது தெரியவந்தது.
இதுகுறித்த புகாரின் பேரில் கருங்கல் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.