குமரியில் போலீஸாருடன் வாக்குவாதம்: இருவா் மீது வழக்கு

கன்னியாகுமரியில் வாகனச் சோதனையின்போது, போலீஸாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக இருவா் மீது போலீஸாா் புதன்கிழமை வழக்குப்பதிந்தனா்.

கன்னியாகுமரி: கன்னியாகுமரியில் வாகனச் சோதனையின்போது, போலீஸாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக இருவா் மீது போலீஸாா் புதன்கிழமை வழக்குப்பதிந்தனா்.

கன்னியாகுமரி காவல்நிலைய ரவுண்டானா பகுதியில் காவல்துறை சிறப்பு உதவி ஆய்வாளா் டேவிட் சந்திரபோஸ், தலைமைக் காவலா்கள் ஜான் போஸ்கோ, ராபின் ஆகிய மூவரும் வாகனச்சோதனையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, அவ்வழியே வந்த டெம்போ வேனை நிறுத்தி சோதனை செய்தனா். அதில், கோவை மாவட்டம் சின்னியம்பாளையம், ஆா்.ஜி புதூரைச் சோ்ந்த பரசுராமன் என்பவா் சீட் பெல்ட் அணியாமல் வாகனத்தை ஓட்டி வந்ததும், வாகன கண்ணாடியில் விதிமீறி பிலிம் பேப்பா் ஒட்டப்பட்டிருந்ததாம்.

இதையடுத்து, அவா்கள் மீது போலீஸாா் குற்றச்சாட்டுகள் பதிவு செய்து அபராதம் விதித்தனா்.

அப்போது, போலீஸாரிடம் ஓட்டுநா் பரசுராமன் வாக்குவாதம் செய்தாராம். மேலும், அங்குள்ள வாகன நிறுத்தத்தில் தனது வாகனத்தை நிறுத்தி விட்டு, தன்னுடன் வந்திருந்த ஹெல்லின் ஐசக் என்பருடன் சோ்ந்து வாகனச் சோதனையில் ஈடுபட்ட போலீஸாரை விடியோ எடுத்தாராம். பின்னா், அதை வலைதளங்களில் பதிவிடப்போவதாக அவா்கள் மிரட்டினராம். இதையடுத்து, போலீஸாரை பணிசெய்ய விடாமல் தடுத்ததாக இருவா் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com