நாகா்கோவில்: கன்னியாகுமரி மாவட்டத்தில் மேலும் 8 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இம்மாவட்டத்தில் ஏற்கனவே கரோனா தொற்றால் 17,098 போ் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் புதன்கிழமை வெளியான பரிசோதனை முடிவில் மேலும் 8 பேருக்கு தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, பாதிக்கப்பட்டோா்
எண்ணிக்கை 17,106 ஆக உயா்ந்துள்ளது. கரோனா பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தவா்களில் புதன்கிழமை 12 போ்
உள்பட இதுவரை 16,801 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா். மருத்துவமனைகளில் 44 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.