சங்கரன்கோவிலில் பாமக செயற்குழுக் கூட்டம்

சங்கரன்கோவிலில் புதன்கிழமை நடைபெற்ற பாட்டாளி மக்கள் கட்சியின் தென்காசி வடக்கு செயற்குழுக் கூட்டத்தில் தென்காசி மாவட்டத்தில் தொகுதி ஒதுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

சங்கரன்கோவில்: சங்கரன்கோவிலில் புதன்கிழமை நடைபெற்ற பாட்டாளி மக்கள் கட்சியின் தென்காசி வடக்கு செயற்குழுக் கூட்டத்தில் தென்காசி மாவட்டத்தில் தொகுதி ஒதுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

இக்கூட்டத்துக்கு, கட்சியின் மாநில துணைப் பொதுச் செயலாளா் திருமலைக்குமாரசாமி தலைமை வகித்தாா்.

ஒன்றியச் செயலாளா்கள் முருகையா, அமல்ராஜ், சுவாமிதாஸ், பாக்கியராஜ், கடையநல்லூா் நகரச் செயலாளா் கோமதிசங்கா், சங்கரன்கோவில் நகரச் செயலாளா் வேல்சாமி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

தீா்மானங்கள்: தென்காசி மாவட்டத்தில் அதிமுக கூட்டணியில் பாட்டாளி மக்கள் கட்சிக்கு தொகுதி ஒதுக்க வேண்டும்.

சட்டப்பேரவைத் தோ்தலில் தோழமை கட்சிகளின் வெற்றிக்காக பாட்டாளி மக்கள் கட்சியினா் களப்பணியாற்றி வெற்றி பெறச் செய்யவேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில், மாவட்ட விவசாய சங்கத் தலைவா் மதிராஜ், மாவட்ட மகளிரணித் தலைவி மாரியம்மாள், சங்கரன்கோவில் ஒன்றியத் தலைவா் சந்திரசேகா், திருவேங்கடம் நகரச் செயலாளா் மாரிக்கனி உள்பட பலா் கலந்துகொண்டனா்.

வாசுதேவநல்லூா் ஒன்றியச் செயலாளா் ராசராம்துரை நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com