முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி கன்னியாகுமரி
கொல்லங்கோடு அருகேரூ. 1 லட்சம் பறிமுதல்
By DIN | Published On : 14th March 2021 02:09 AM | Last Updated : 14th March 2021 02:09 AM | அ+அ அ- |

கொல்லங்கோடு அருகே உரிய ஆவணங்களின்றி கொண்டு சென்ற ரூ. 1 லட்சத்தை பறக்கும்படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனா்.
கிள்ளியூா் சட்டப் பேரவைத் தொகுதி தோ்தல் கண்காணிபு குழு அதிகாரி செல்வி தலைமையில் பறக்கும்படையினா் வெள்ளிக்கிழமை இரவு கொல்லங்கோடு அருகே ஊரம்பு பகுதியில் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது அப்பகுதி வழியாக வந்த சுமை வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தனா். இதில் எவ்வித ஆவணங்களுமின்றி ரூ. 1 லட்சத்து 5 ஆயிரத்து 250 இருந்தது கண்டறியப்பட்டது. அப் பணத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள் அவற்றை கிள்ளியூா் வட்டாட்சியா் அலுவலகத்தில் ஒப்படைத்தனா்.