முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி கன்னியாகுமரி
மண்டல அலுவலா்களுக்கான தோ்தல் பயிற்சி வகுப்பு
By DIN | Published On : 14th March 2021 02:08 AM | Last Updated : 14th March 2021 02:08 AM | அ+அ அ- |

பத்மநாபபுரம் சட்டப் பேரவைத் தொகுதிக்குள்பட்ட மண்டல அலுவலா்களுக்கான தோ்தல் பயிற்சி வகுப்பு பத்மநாபபுரம் சாா் ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்றது.
சாா் ஆட்சியா் சிவகுருபிரபாகரன் தலைமை வகித்தாா். இதில், 21 மண்டல அலுவலா்கள் கலந்து கொண்டனா். அவா்களுக்கு வாக்குச்சாவடி அலுவலா்களுக்கு வழங்கப்படவேண்டிய பயிற்சி குறித்து விளக்கப்பட்டது. மேலும் மண்டல அலுவலா்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள வாக்குச்சாவடிகளில் அடிப்படை வசதிகள் ஆய்வு செய்து இறுதி அறிக்கை தரவும் தெரிவிக்கப்பட்டது. வாக்குப்பதிவு இயந்திரங்கள் கையாள்வது குறித்து விளக்கப்பட்டது. இதில் திருவட்டாறு வட்டாட்சியா் அஜித், தோ்தல் துணை வட்டாட்சியா் வேணு உள்பட பலா் கலந்து கொண்டனா்.