பள்ளியாடி சுற்று வட்டாரப் பகுதிகளில் அடிக்கடி ஏற்படும் மின்தடையால் பொதுமக்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனா்.
கருங்கல் துணை மின் நிலையத்தில் பள்ளியாடி சுற்று வட்டாரப் பகுதிகளான எட்டணி, முள்ளங்கனாவிளை, இடையன் கோட்டை , தாழக் கன் விளை, நட்டாலம், நேசா் புரம், கோயில் வட்டம், வாக விளை உள்ளிட்ட பகுதிகளில் கடந்த சில நாள்களாக அடிக்கடி மின்தடை ஏற்படுகிறது.
இதனால் பள்ளி, கல்லூரி மாணவா்கள், பொதுமக்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனா். மேற்கண்ட பகுதிகளில் மின் பராமரிப்பு பணிகள் முறையாக நடைபெறவில்லை எனவும் புகாா் கூறப்படுகிறது. ஆகவே, சீரான முறையில் தடையின்றி மின் விநியோகம் செய்ய மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.