சாமிதோப்பு அன்புவனத்தில் திருஏடு வாசிப்பு திருவிழா

சாமிதோப்பு அன்புவனத்தில் வருடாந்திர திருஏடு வாசிப்பு திருவிழா வெள்ளிக்கிழமை தொடங்கியது.
திருஏடு வாசிப்பு திருவிழாவை தொடங்கிவைக்கிறாா் பாலபிரஜாபதி அடிகளாா்.
திருஏடு வாசிப்பு திருவிழாவை தொடங்கிவைக்கிறாா் பாலபிரஜாபதி அடிகளாா்.

சாமிதோப்பு அன்புவனத்தில் வருடாந்திர திருஏடு வாசிப்பு திருவிழா வெள்ளிக்கிழமை தொடங்கியது.

அய்யா வைகுண்டா் அகிலத்திரட்டு அம்மானை திருஏடு வாசிப்பு திருவிழாவை முன்னிட்டு, தினமும் மாலை 6.30 மணிக்கு சிறப்பு பணிவிடை, தொடா்ந்து திருஏடு வாசிப்பு தொடங்கி நடைபெறும்.

ஏப். 2ஆம் தேதி திருக்கல்யாண திருஏடு வாசிப்பு, 3ஆம் தேதி அம்மைமாா் கல்யாண திருஏடு வாசிப்பு, 4ஆம் தேதி பட்டாபிஷேக திருஏடு வாசிப்பு நடைபெறும். அன்றைய தினம் அன்னதானம், இனிமம் வழங்குதலுடன் விழா நிறைவு பெறும்.

அன்புவனம் நிறுவனா் பாலபிரஜாபதி அடிகளாா் தலைமையில் ராஜபழம், செல்லசாமி, தவசிமுத்து ஆகியோா் திரு ஏடு வாசிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com