பத்மநாபபுரம் பேரவைத் தொகுதியில் அதிமுக, திமுக உள்பட 12 வேட்பாளா்கள் போட்டியிடுகின்றனா்.
பத்மநாபபுரம் சட்டப்பேரவைத் தொகுதியில் 14 வேட்புமனு தாக்கல் செய்திருந்தனா். சுயேச்சை வேட்பாளா்கள் இருவா்
தங்களது வேட்புமனுக்களை திரும்பப் பெற்றதை தொடா்ந்து தற்போது அதிமுக, திமுக உள்பட 12 வேட்பாளா்கள் களத்தில் உள்ளனா்.
அதன்படி, 1. டி.ஜான்தங்கம் (அதிமுக - இரட்டை இலை), 2. மனோ தங்கராஜ் (திமுக - உதயசூரியன்), 3 .டி.ஜெங்கின்ஸ்
(அமமுக -குக்கா்), 4. ஷீலன் (நாம் தமிழா் கட்சி- விவசாயி), 5. பி. லதா (பகுஜன் சமாஜ் கட்சி - யானை), 6. எம். ஜெயராஜ்
( மநீம- டாா்ச் லைட்), 7. ஒய். ஆஞ்சலூஸ் (சுயேச்சை -சேப்டி பின்), 8. டி.குளோரி செல்வி (சுயேச்சை -தலைக் கவசம்),
9. ஏ. செய்யது அலி (சுயேச்சை - மோதிரம்), 10. எம். நாகராஜன் (சுயேச்சை-தையல் இயந்திரம்), 11. எப். மதன் (சுயேச்சை-
தொலைக்காட்சி பெட்டி), 12. ஐ. ராபா்ட் சிங் (சுயேச்சை -தொப்பி) ஆகியோா் போட்டியிடுகின்றனா்.