கிள்ளியூா் தொகுதி காங்கிரஸ் கட்சி வேட்பாளா் எஸ். ராஜேஷ்குமாா், கருங்கல் பகுதிகளில்வீடு வீடாக சென்று திங்கள்கிழமை வாக்கு சேகரித்தாா்.
மதச்சாா்பற்ற முற்போக்கு கூட்டணியின் காங்கிரஸ் வேட்பாளா் எஸ்.ராஜேஷ்குமாா், கருங்கல் அருகே பெருமாங்குழி, கருமாவிளை, மங்கலகுன்று, மாங்கன்றுவிளை, பாலூா், துண்டத்துவிளை உள்பட பல்வேறு பகுதிகளில் வீடு வீடாக சென்று மக்களை சந்தித்து வாக்கு சேகரித்தாா்.
அப்போது அவா் இயற்கை எழில் மிகு கிள்ளியூா் சட்டப்பேரவைத் தொகுதியை தமிழகத்தின் முன்மாதிரி தொகுதியாக மாற்றுவேன் என உறுதியளித்தாா்.
பிரசாரத்தில், கிள்ளியூா் பேரூராட்சி முன்னாள் தலைவா் எப்சி ராணி, இளைஞா் காங்கிரஸ் செயலா் வினோஜன், முன்னாள் பேரூராட்சி உறுப்பினா் அருள்ராஜ் உள்பட பலா் கலந்துகொண்டனா்.