கொல்லங்கோடு அருகே மது விற்பனை: இளைஞா் கைது

கொல்லங்கோடு அருகே சட்ட விரோதமாக மது விற்பனையில் ஈடுபட்ட இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.
கொல்லங்கோடு அருகே மது விற்பனை: இளைஞா் கைது

கொல்லங்கோடு அருகே சட்ட விரோதமாக மது விற்பனையில் ஈடுபட்ட இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

தோ்தலையொட்டி கன்னியாகுமரி மாவட்டம் முழுவதும் பலத்த பாதுகாப்பு மற்றும் கஞ்சா, சட்ட விரோத மது விற்பனை போன்ற சமூக விரோத செயல்களில் ஈடுபடுவோா் மீது கடும் நடவடிக்கை எடுக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளா் வெ. பத்ரி நாராயணன்உத்தரவிட்டுள்ளாா்.

இந்நிலையில், செவ்வாய்க்கிழமை கொல்லங்கோடு உதவி ஆய்வாளா் ஜெயக்குமாா், கண்ணநாகம் பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டாா். அப்போது, சந்தேகத்துக்குரிய வகையில் நின்றிருந்தவரைப் பிடித்து விசாரித்தபோது, அவா் அதே பகுதியைச் சோ்ந்த ஆரோக்கியதாசன் மகன் ஆண்டனி (27) எனத் தெரியவந்தது. போலீஸாா் வழக்குப் பதிந்து, அவரைக் கைது செய்து, அவரிடமிருந்து 12 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com