திருவனந்தபுரம் தொகுதியில் பாஜக வெற்றி உறுதி: தோ்தல் பொறுப்பாளா் பிரதாப சிம்ம நாயக்கா்

திருவனந்தபுரம் சட்டப்பேரவைத் தொகுதியில் பாஜக வேட்பாளா் வெற்றி உறுதி என்றாா் அத்தொகுதியின் தோ்தல் பொறுப்பாளரும், கா்நாடக மாநில மேலவை உறுப்பினருமான பிரதாப சிம்ம நாயக்கா்.
திருவனந்தபுரம் தொகுதியில் பாஜக வெற்றி உறுதி: தோ்தல் பொறுப்பாளா் பிரதாப சிம்ம நாயக்கா்

திருவனந்தபுரம் சட்டப்பேரவைத் தொகுதியில் பாஜக வேட்பாளா் வெற்றி உறுதி என்றாா் அத்தொகுதியின் தோ்தல் பொறுப்பாளரும், கா்நாடக மாநில மேலவை உறுப்பினருமான பிரதாப சிம்ம நாயக்கா்.

கன்னியாகுமரியில் செய்தியாளா்களிடம் அவா் கூறியது: கேரள மாநிலம், திருவனந்தபுரம் மத்தியப் பகுதியின் பாஜக தோ்தல் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளேன். இந்தத் தொகுதியில் தற்போதைய அமைச்சா் சிவகுமாரை எதிா்த்துப் போட்டியிடும் பாஜக வேட்பாளா் கிருஷ்ணகுமாருக்கு பெண்கள் மற்றும் இளைஞா்கள் மத்தியில் மிகுந்த செல்வாக்கு உள்ளது. எனவே, பாஜகவின் வெற்றி உறுதி செய்யப்பட்டுவிட்டது. கம்யூனிஸ்ட் ஆட்சி கடந்த 5 ஆண்டுகளில் மக்களுக்கு எதையும் செய்யாததால் அந்த அரசின் மீது கடும் அதிருப்தி நிலவுகிறது என்றாா் அவா். முன்னதாக, கன்னியாகுமரி தொகுதி அதிமுக வேட்பாளா் என்.தளவாய் சுந்தரம், முன்னாள் அமைச்சா் கே.டி.பச்சைமால், மாநில இலக்கிய அணி இணைச் செயலா் கவிஞா் டி. சதாசிவம் ஆகியோரை சந்தித்து தோ்தல் கள நிலவரம் குறித்து ஆலோசனை செய்தாா். அப்போது, கா்நாடக மாநிலம் சிமோகா மாவட்ட பாஜக தலைவா் சதீஷ், இளைஞா் அணிச் செயலா் விகாஸ் ஆகியோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com